தமயந்தி என்கிற பெயரினை ஒரு ஆளுமையாக நிறையக் கேட்டிருக்கின்றேன். அவரது
புகைப்படக் கண்காட்சி - அனேகம் முதலாவதாக இருக்கவேண்டும் - யாழ்ப்பாணத்தில்
எண்பதுகளில் இடம்பெற்றதனை யேசுராசா
"பதிவுகள்" என்கிற தனது நூலில்
பதிவுசெய்திருக்கின்றார். அவர் எடுத்த நிறையப் புகைப்படங்களை அவரது
முகநூல் பதிவுகளூடாகப் பார்த்திருக்கின்றேன்.
சாதியம், அரசியல் உள்ளிட்ட கருத்துகளை குறிப்புகளாகவும், கட்டுரைகளாகவும்
வாசித்திருக்கின்றேன். தவிர, எனக்கும் கூத்துக்கலை மீது ஆர்வம் இருப்பதால்
அவர் பகிரும் கூத்துகள் தொடர்பான விடயங்களையும் காணொளிகளையும்
பார்த்திருக்கின்றேன்.