திங்கள், 7 ஆகஸ்ட், 2017

ஏழு கடல்கன்னிகள் புத்தக விமர்சனம்

 எழுத்தாளர், விமர்சகர் சிராஜ் மஸூர்

நன்றி; தோழர் றியாஸ் குரானா

தொட்டுணர்ந்த ஏழு தேவதைகள் பற்றிய கதை -கரவைதாசன்-

 தமயந்தியின்  ஏழு  கடல் கன்னிகள்  வாசிப்பு மனநிலை!

அலை ஒதுங்கிய கரையில் விசாரணை செய்! எனும் அரசியல் கோரிக்கையுடன் விரிகிறது பக்கங்கள்.
ஓலசுண்டின் அலை ஒதுங்கிய கரையொன்றில் தானை வைத்து கடல் நுகப்பினை கணக்கிட்டு தூண்டில் எறிந்த களைப்பு தீர முன்னே வங்கு நிறைந்த மீன் அளைந்த கைகளை உப்புநீரிலேயே அலம்பிவிட்டு ஈரமான கைகளை தன் சாரத்திலே துடைத்து விட்டு உழைப்பேறி மரத்துப்போன விரல் நீட்டி அழைக்கின்றார் கதை சொல்ல... 

கடலோடியின் நினைவுக் குறிப்புகளினுடனான காற்றில் உப்புக் கரிக்கவில்லை

தமயந்தியின் ஏழு கடல்கன்னிகள்

தர்சன் அருளானந்தன்-

டினமான கணக்குகளை அறிந்து கொண்டும் அந்தக் கணக்குகளிற்குள் ஊடுருவி, கடந்து சென்ற படைப்பின் உயர்வான கவர்ச்சியாக "அதற்குள் அவராகவே வாழ்வதால்" சாத்தியம் ஆக்கப்பட்டுள்ளது.

தமயந்தியின் கதைகள் இயல்பான நேரடித் தன்மை கொண்டவை. இக் கதைகளின் பின்னணியில் இயல்பான கடல்சார் வாழ்க்கை கண்ணோட்டமும், ஈழப்போராட்ட மனிதம் சார் ஏக்கங்களும் அக்கம்பக்கமாக நிறுத்தப்படுகின்றது. கதைகள் அனுபவத்தையும், உணர்வுநிலைகளையும் மட்டுமே நம்பியிருக்கின்றன. உண்மையின் யதார்தங்கள் ஆங்காங்கே எமது நனவிலி மனங்களை கட்டுடைத்து வெள்ளம்போல் நுரைதிரள உப்பு கலந்த வாசனையோடு எம் நாசிகளை தழுவிச் சொல்கின்றன.


புழுங்கலரிச் சோற்றுடன் குஞ்சுக்கணவாயின் புளி அவியல் -அருண்மொழி வர்மன்.


தமயந்தி என்கிற பெயரினை ஒரு ஆளுமையாக நிறையக் கேட்டிருக்கின்றேன்.  அவரது புகைப்படக் கண்காட்சி - அனேகம் முதலாவதாக இருக்கவேண்டும் - யாழ்ப்பாணத்தில் எண்பதுகளில் இடம்பெற்றதனை யேசுராசா "பதிவுகள்" என்கிற தனது நூலில் பதிவுசெய்திருக்கின்றார்.  அவர் எடுத்த நிறையப் புகைப்படங்களை அவரது முகநூல் பதிவுகளூடாகப் பார்த்திருக்கின்றேன்.

சாதியம், அரசியல் உள்ளிட்ட கருத்துகளை குறிப்புகளாகவும், கட்டுரைகளாகவும் வாசித்திருக்கின்றேன்.  தவிர, எனக்கும் கூத்துக்கலை மீது ஆர்வம் இருப்பதால் அவர் பகிரும் கூத்துகள் தொடர்பான விடயங்களையும் காணொளிகளையும் பார்த்திருக்கின்றேன்.




கடல்களால் சூழப்பட்ட கதைகள் -சாஜீத் அம்சஜீத்-

தினகரன் 01.10.2016

இக்கால கட்டத்தின் சிறுகதைகள் இலக்கிய உலகினுள் அதிக கவனத்தினைத் தன்வசமாக்கி வைத்திருப்பதினை நாம் அவதானிக்கலாம். நாவல்கள் எனும் பெரும் பரப்பினைத் தாண்டியும், கவிதைகளின் தாக்கத்தினை மீறியும் சிறுகதைகள் நன்கு வாசிக்கப் படுகின்றன. கதை சொல்லல் பரப்பினை இலகு வடிவத்தில் தருவதற்கு முயற்சிக்கின்ற சிறுகதைகள் எல்லாக் காலகட்டத்திலும் அதிகப்படியான வர்ணனைகளைத் தவிர்த்தப்டியே வெளிவந்திருக்கின்றன.


கொல்வதும் வெல்வதும் மட்டுமல்ல வீரம், காப்பதும் வீரம்தான். மாவீரம் -அனலை சிவம்-


நூல் விமர்சனம் - 09.10.2016இல் கனடாவில் நிகழ்ந்த "ஏழு கடல்கன்னிகள்" புத்தக விமர்சனத்தில் சிவம்.
கடையால். திருந்தாதி. ஆணம். விக்கினம். புருவத்தோரி. வாரி. விடந்தை. சுக்கானி.  திறவு. நுகைப்பு. வங்கு. கவிர். வெப்பல்.  வடு.  தாவீது. கவண். குட்டூறு. தலைச்சன்.  தண்டையல். நிட்டூரம். தங்கு தாணையம்.  சக்கிடுத்தார். பாய்ச்சுக் கம்பு. மண்டாடியார்.  கடிப்புத்தூர்.
பேக்கிலவாண்டி. பரபாசு. தொடுவத்தோணி. நாவட்டப்பாறை. வட்டக்கல் பாறை. சாட்டாமாற்றுச் செடிகள். தாமரைக் காத்தான்கள். வெள்ளாப்பு. பாடு. மைம்மல்(மம்மல்) கிணாய்ச்சுக்கொண்டு (கிணாய்த்து) முள்ளிக்கொடி.  இசங்குச்செடி.  கிளாச்சி.  கண்ணா. குண்டுமணி.  வீளி. வீச்சுளாத்தி. புங்கைமரம். மாலைவெள்ளி. கப்பல்வெள்ளி. மூவிராசாக்கள்வெள்ளி. ஆறாம் மீன்கூட்டம். செட்டியைக்கொன்ற வெள்ளி. விடிவெள்ளி.

எனக்கு இக் கதைகளில் ஒரு குறையுண்டு

-ஹஸீன்-

  ("கதவு திறந்துள்ளது"
23.09.2016இல் அக்கரைப்பற்றில் நிகழ்ந்த மூன்று நூல்கள் பற்றிய உரையாடல். ஏழு கடல்கன்னிகள் பற்றி தோழர் ஹஸீன் முன்வைத்தவை.)


தமயந்தியின் கதையில் என்னை வசீகரித்தது அவருடைய மொழிதான்.
அவருடய மொழி முபாறக் அலி நானாவின் சேவலின் தொண்டை போல திறந்தது. அவருடைய வாழ்வுதான் அவர் மொழி. அவருடைய வாழ்வு அவருடைய உறவுகள். தமயந்தியின் உலகம் அப்புவும் குழந்தைகளும்.
அவர் புலம் பெயர்ந்து சேர்ந்த நாடும் மீனவ தேசம்.


ஏழு கடல்கன்னிகள் மீதான எனது வாசிப்பு -மிஹாத்-

("கதவு திறந்துள்ளது"  23.09.2016இல் அக்கரைப்பற்றில் நிகழ்ந்த மூன்று நூல்கள் பற்றிய உரையாடல். ஏழு கடல்கன்னிகள் பற்றி தோழர் மிஹாத் முன்வைத்தவை.)


Fiction is not imagination. It is what anticipates imagination by giving it the form of reality.
Jean Baudrillard _



தமயந்தியை தொண்ணூறுகளின் மத்திய காலத்திலிருந்து எழுத்துகள் வழியாக அறிந்திருக்கிறேன். அவர் தமிழ் போராட்ட இயக்கங்களோடு ஒரு காலத்தில் சம்பந்தப்பட்டிருக்கக் கூடும் என்பதையும் அனுமானித்திருந்தேன்.
எனக்கு பிரதிகளின் மீதான பார்வையை மேற்கொள்வதில்தான் பிரியம் அதிகம் என்பதனால் தமயந்தியை மறந்து விடவே விரும்புகிறேன்.
ஏழு கடல்கன்னிகள் என்னும் ஏழு கதைகளின் தொகுதியானது வாசிப்பின் போது எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகளையும் அபிப்பிராய மாற்றங்களையும் எனது புரிதல்கள்வழியே தெரிவிப்பது மட்டுமே எனது விருப்பம்.
உலக இலக்கியச் சூழலின் பிந்திய காலப் போக்குகளை ஒரு அளவீடாகக் கொண்டு ஒப்பீட்டு அடிப்படையில் இந்தக் கதைகளை நான் நோக்க விரும்பவில்லை.

கடலார் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களையும் பேசிய ஏழு கடற்கன்னிகள் -அம்ரிதா ஏயெம்-




அப்புவுக்கு நன்றாகவே தெரியும் கடலையும் அலைகளையும் லூர்துராசனால் விடமுடியாது என்பது. ஏனெனில் அப்பு அதிகமாய் போராடியது அவனோடும் கடலோடும்தான்.” 



 
1) சிலர் மூன்றாம் நிலை அனுபவங்களை அதாவது ஒருவர் இன்னொருவருக்கும், அவர் அதை இ;ன்னொருவருக்கு கூறியவற்றை, அனுபவித்தவற்றை பதிவு செய்வார்கள். அல்லது இரண்டாம் நிலை அனுபவங்களை தங்களுக்கு இன்னொருவர் கூறிய, அனுபவித்தவைகளை பதிவு செய்வார்கள். அடுத்தது முதலாம்நிலை அனுபவங்கள், தாங்கள் நேரடியாக ஈடுபட்ட, கண்டுகளித்த, உணர்;ந்த விடயங்களை பதிவு செய்வார்கள். இந்தக் கடைசி நிலைதான் உணர்வுபூர்வமானதாகவும் அனுபவபூர்வமானதாகவும் அறிவுபூர்வமானதாகவும் இருக்கும். தமயந்தியின் ஏழு கடற்கன்னிகளும் முதலாம் நிலை அனுபவங்கள்போல்தான் தெரிகிறது.